பாரதி ஆத்திசூடி தன்முனைக் கவிதைகள்

 ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து,

மோனத் திருக்கு முழுவெண் மேனியான்;

கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்;

மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;

ஏசுவின் தந்தை; எனப்பல மதத்தினர்

உருவகத் தாலே உணர்ந்துண ராது

பலவகை யாகப் பரவிடும் பரம்பொ


ருள் ஒன்றே;

அதனியல் ஒளியுறும் அறிவாம்;

அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;

அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.


தன்முனைக் கவிதைகளில் பல்வேறு முயற்சிகள் பல படைப்பாளர்களால் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. அதில் என்னுடைய பங்களிப்பாக...





• #அவளின்_நாட்குறிப்பேடு 2021 (அமெரிக்காவில் இருந்து வெளிவந்த முதல் தன்முனைக் கவிதைகள் நூல்)


• #தன்முனைத்தமிழி 2023 (கல்வெட்டுத் தமிழியில் தன்முனைக் கவிதைகள்)


• #சோர்விலாள்_பெண் 2024 (திருக்குறள் தன்முனைக் கவிதைகள்)


• #உறைபனி_உதிர்த்த_இறகு 2024 (பன்னாட்டுப் படைப்பாளர்களின் தன்முனைக் கவிதைகள் தொகுப்பு நூல்)


• #வாசமல்லி_பூத்திருக்கு 2025 (தன்முனைத் திருவிழாவில் வெளியிடப்படும் நூல்)


இந்த வரிசையில்...


மகாகவி பாரதியின் 'புதிய ஆத்திசூடியில்' தன்முனைக் கவிதைகள் எழுதியுள்ளேன். 



#சூரரைப்_போற்று என்ற இந்நூல்

வரவிருக்கும் தன்முனைத் திருவிழாவில் #நூலேணி_பதிப்பகம் வழியாக வெளியிடப்பட இருக்கிறது என்பதை ஆவலுடன் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.




#நெல்லை_அன்புடன்_ஆனந்தி

நூலேணி பதிப்பகம் 

நூலேணி - புத்தக வீதி Book Street

Comments

Popular posts from this blog

தன்முனைத் திருவிழா 01

#தன்முனைக்கவிதைகள்_போட்டி